ஈஷா மையத்திற்கு பிரதமர் வருவதை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவல் துறையினர்

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை வருவதை முன்னிட்டு 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை கோவை வருகின்றார்.

பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் மையத்தினை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி தலைமையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு (என்.எஸ்.ஜி) மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு, இந்திய விமானப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் தொடந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதில், வானிலை மாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் விமான நிலையத்தில் இருந்து தரைவழி பயணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்ல குண்டு துளைக்காக காரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியான செம்மேடு, முட்டத்துவயல், இருட்டுபள்ளம், ஆலாந்துறை ஆகிய பகுதிகள் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...