ஈஷா மையத்திற்கு வரும் மோடியை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஈஷா யோகா மையத்தின் மீதும், ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி மீதும் அவதூறு பரப்பி எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை கோவை வரவுள்ளார்.

இதனிடையே, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈஷா யோகா மையத்தின் மீதும், மோடியின் மீதும் எதிர்ப்பு தெரிவித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். 



இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. காருண்யா நிறுவனத்தின் பின்னணியும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதல் பேரில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள், சவுக்கு, வினவு உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, ஈஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நடைபெற்று வரும் அவதூறு பிரச்சாரங்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...