கோவை- பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தால் ஈச்சனாரி கோவில் பாதிக்கப்படாது என பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ஓதுக்கி இருப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

பொள்ளாச்சி இடையேயான 4 வழிச்சாலை  அமைக்கப்பட்டு வரும் பகுதிகளை  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படாது எனவும்  சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் மேம்பாலம் அமைக்கப்பட்டு கோவிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் நெடுஞ்சாலை அமைக்கும் போதே சாலையின் இரு பகுதிகளிலும் செடிகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற  சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் , பொள்ளாச்சி  கோவை மக்கள் நகரங்களை காப்பதில் ஆர்வத்துடன் இருப்பதால்  4 வழிச்சாலை பிரமாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு ஓதுக்கி இருப்பதாகவும் குறிப்பாக  கிழக்கு கடற்கரை சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் , தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து கிழக்கு கடற்கரை சாலை விர்வாக்க பணிகள் தொடர்பாக பேச இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது மிக முக்கியமாக பொருளாதார சாலையாக உருவெடுக்கும் எனவும், புறந்தள்ளப்பட்ட  கிழக்கு மாவட்ட மக்கள்  வசிக்கும் பகுதிகளில் இதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகி அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி கொடுக்கும்  எனவும் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போதைய முதல்வர் சாலை போக்குவரத்து துறையில் இருந்ததால் இந்த சாலை அமைவதன் பலன்கள் தெரியும் எனவும், இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஓத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறந்தள்ளுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...