பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்படும்- பண்டாரு தத்தாத்ரேயா

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டம் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அலுவவலர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டு அரசிடம் வைக்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தத்தாத்ரேயா கூறுகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், இதற்கான மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காலத்திற்கு ஒவ்வாத 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கும் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், வரவிருக்கும் கூட்டத்தொடரில் சம்பளம், நிறுவனத்துடன் ஒத்துழைப்பு என இரண்டு மசோதாக்களும் அடுத்த கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை சூழல், உடல்நலன், பணி பாதுகாப்பு ஆகியவை அடங்கிய இரண்டு சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ரோஸ்கார் யோஜனா திட்டம் மூலம் புதிதாக பணியில் இணையும் ஜவுளித்துறை ஊழியர்களுக்கு 12 சதவிகித பி.எப் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறிய அவர், இது வழக்கமான 8.33 சதவிகிதத்தை விட கூடுதல் என்பதால் ஜவுளித்துறையில் கூடுதல் பணிகள் மற்றும் தொழில்களை உருவாக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...