ஈஷாவிற்கு மோடி வருகையை எதிர்த்து கருப்பு பலூன் பறக்கவுடும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் அமைப்பினர்



கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து, வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஈஷா யோகா மைய சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது யானை முகங்களுடனும், கருப்பு பலூன்களுடனும் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக்கட்சியினர், வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டக்காரர்கள் கைகளில் இருந்த பலூன்களை காவல் துறையினர் உடைத்தனர். 



இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறும்போது, ஈஷா யோகா மையத்தினர் காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தும், அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பது கண்டிக்கத்தகக்து எனவும், இது ஈஷாவின் குற்றச்செயல்களை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...