பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிராந்தி குமார் திடீர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக சுதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



இதனையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.



அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:



கோவை மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இணை நோய் உள்ளவர்கள் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...