கிணத்துக்கடவு அருகே திமுக ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் - பொதுமக்கள் முற்றுகை!

கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கிணத்துக்கடவில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட நம்பர் 10 முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு அனுமதியின்றி கிராவல் மணல் லாரியில் கொண்டு செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்குமார் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி நம்பர் 10 முத்தூர் பகுதி சேர்ந்த கிராம மக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தை திடீரென முற்றறுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதி சேர்ந்த காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம், ஈஸ்வரன், சாந்தலிங்கம் ஆகிய ஐந்து பேரும் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சாந்தலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...