கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கரும்புகடை பகுதியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேலுமணி என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 1டன் ரேஷன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை திப்புநகர் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர் போத்தனூர் அன்புநகர் பகுதியை வேலுமணி என்பதும், கரும்புக்கடை சாரைமேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பருடன் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலுமணியை கைது செய்த போலீசார், அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கூட்டாளியான அஜீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...