கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத் தீ!

கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ பற்றியெரிந்து கொண்டுள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக நீலகிரி மற்றும் சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து கூடுதல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், 40 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மூங்கில் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டது.



தற்போதுவரை, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்ட நிலையில், சிறுமுகை மற்றும் நீலகிரி வனச்சரகத்தில் இருந்து கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் குழு தீயை அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் திசைக்கு ஏற்ப தீயை அணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...