கோவை அருகே 7வது நாளாக எரியும் காட்டுத் தீ - மாலைக்குள் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை தகவல்

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் 7 ஆவது பற்றி எரியும் காட்டு தீ, இன்று மாலைக்குள் அணைக்கப்பட்டுவிடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 சதவீத தீ ஏற்கனவே அணைக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதி மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பரவியது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பரளவில் பற்றியெரிந்த தீயை அணைக்கும் பணியில், கோவை, உடுமலை, நீலகிரி, ஈரோடு, சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகத்தில் இருந்து வந்த சுமார் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு, அதிகளவு தீ பிடித்து எரிந்த 4 இடங்கள் முழுமையாக அணைக்கப்பட்டது.



இந்த விபத்தில், 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடிகொடிகள், முழுமையாக தீக்கு இரையாகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கூடுதல் பணியாளர்களுடன் 7 ஆவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாலைக்குள் முழுமையாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...