கோவையில் பொது இடத்திலிருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது புகார்!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் பொது இடமான பூங்காவில் இருந்த 18 மரங்களை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வெட்டிய சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே பொது இடத்தில் இருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



ஜி.என்.மில்ஸ் அருகிலுள்ள சான்பிரிக்ஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 25 தனித்தனி வீடுகள் உள்ளன.



மேலும் 50 சென்ட்டில் பார்க் அமைந்துள்ளது. இந்த பார்க்கில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த பார்க்கில் பெரியவர்கள், பெண்கள் வாக்கிங் போகவும், குழந்தைகள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வெயில் காலம் என்பதால் இங்குள்ள மரங்கள் அங்குள்ளவர்களுக்கு இதமான சூழலை தருகின்றன.



இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் பிரகாஷ் என்பவர் இன்று காலை பார்க்கிலுள்ள 18 மரங்களை திடீரென வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் புகாரை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்தில் வெயில் காலத்தில் நிழல் தந்த 18 மரங்களை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...