கோனியம்மன் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

1. அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து கூட்செட் ரொடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும் பெரிய கடை வீதி, வின்சென்ட்ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2. பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அல்லது பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3. மேட்டுப்பாளையம் சாலை, சுக்கரவார்பேட்டை பூமார்க்கெட் மற்றும் புருக்பாண்டு சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக கூட்செட்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

4. பொள்ளாச்சி சாலையிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

5. தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

6. பேரூர் சாலையில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதூர், பொன்னையாராஜபுரம், தடாகம் சாலை வழியாக காந்திபார்க் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேலும் அன்றைய தினம் லாரிப் போக்குவரத்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வரும் சாலையிலுள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை தேர்வரும் சாலையில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும். 

பொது மக்களும், வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...