ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் என புதிய தமிழகம் கிருஷ்ணாசாமி பேட்டி

விவசாயத்துக்கு மட்டும் நிலம் கிடையாது எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்க பைப் நடுவதன் மூலம் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஏற்று கொள்கிறது என கூறினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய்கள் நடுவதன் மூலமாக புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும், அப்படி வந்தால் பெட்ரோல், டீசல் எடுக்கும் அரேபிய நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் செத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையே சரியல்ல என கூறிய அவர், விவசாயத்துக்கானது மட்டும் நிலம் கிடையாது எனவும், இந்தியாவில் எங்கும் பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது என்றால் எங்கு சென்று வாங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்றால் வாகனங்களை எப்படி ஓட்டுவது, மேக்கின் இந்தியா திட்டம் என்ன என கூறிய அவர், இருக்கிற இடத்தில் தான் அவற்றை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டு காலத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தாததன் காரணமாகவே தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டிய நிலை உள்ளதாக கிருஷ்ண சாமி அப்போது கூறினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...