கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த சில நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகின.



குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டு பகுதி மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரம் விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், மரத்தை அகற்றும் பணியிலும் மின் இணைப்பை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...