கணவரை தாக்கி சொத்துக்களை அபகரிக்க முயன்ற மனைவி - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி தங்கமணி, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது சகோதரிக்கு தான் எழுதி கொடுத்த நிலத்தை அபகரிக்க முயன்று தன்னை தாக்கியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



திருப்பூர்: தன்னை தாக்கி தனது சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தங்கமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். முருகேசன் தனக்கு சொந்தமான 3.25 செண்ட் நிலத்தில் வீடு கட்டி இருந்த நிலையில், இருவரும் அதில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் தங்கமணிக்கு உடல்நிலை சரியில்லாததால் முருகேசன் பல இடங்களில் கடன் பெற்று அவருக்கு சிகிச்சை பார்த்து வந்துள்ளார். மேலும் தனது சகோதரி மல்லிகாவிடம் பெற்ற கடனுக்காக தனது வீட்டை சகோதரி பெயரில் கிரயம் செய்துவிட்டு மேற்கொண்டு சிகிச்சைக்காக 4 லட்சம் பெற்றுள்ளார்.

இதனிடையே தனது சகோதரிக்கு வீட்டை கிரயம் செய்து விட்ட நிலையில் தன்னை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்து வரக்கூடிய தங்கமணி கடந்த சனிக்கிழமை அவரது உறவினர்களோடு சகோதரியின் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். 



இது குறித்து தான் கேட்க சென்றபோது தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...