கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏற்படும் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி!

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலையில், நெடுஞ்சாலை தரப்பில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி பிரிவு முதல் அரசம்பாளையம் பிரிவு வரை பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனகள் சென்று வருகின்றன.

இந்நிலையில், டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், மண் கொட்டி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த சாலையை தற்காலிகமாக சரி செய்யாமல், நிரந்தர தீர்வு கான தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் தரமின்றி இருந்தால், புதிதாக மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...