நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது -சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி

கோவை புலியகுளம் பகுதியில் மாற்று அரசியலை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல பிரச்சார இயக்கத்தில் கலந்துக் கொண்ட சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு கைவிடவேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வு என வலியுறுத்தினார். ஈசா யோகா மையம் எல்லா விதமான விதி முறைகளையும் மீறியுள்ளது எனவும், விதி முறைகளை மீறி் செயல்பட்ட ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஈசா  நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், உடந்தையாக இருந்த அமைச்சர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமலும், மாநில அரசுசின் அனுமதி பெறாமல் மத்திய அரசு செயல்படுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்குறியோடு மாணவர்கள் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வாசுகி வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...