மதுக்கரையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை வழங்க லஞ்சம் தர மறுத்த இருவரை பணியிட மாற்றம் செய்த மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையரை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பிச்சனூர் அரசு பள்ளி அமைப்பாளராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் மற்றும் சுந்தராபுரம் செங்கோட்டையார் அரசு பள்ளி அமைப்பாளர் நாகமணி ஆகிய இருவரையும் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவுத் திட்ட ஆணையர் கணேசன் பணியிடமாற்றம் செய்துள்ளார்.

இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை அமைப்பாளர்களுக்கு வழங்க சத்துணவு திட்ட ஆணையர் கணேசன், லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சத்தை தர மறுத்த சோமசுந்தரம் மற்றும் நாகமணி ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே உடனடியாக அவர்களது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவில்லை என்றால், அடுத்த கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

ஒன்றிய தலைவர் ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நித்திய பிரியா, ஜெகநாதன் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...