கோவையில் 2 புதிய மகளிர் காவல்நிலையங்களை திறந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய 2 பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், கோரிக்கையை ஏற்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார்  மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன்  ஆகியோர் பரிந்துரையின் பேரிலும், தமிழக முதல்வர்  உத்தரவின் பேரிலும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.



இந்த காவல் நிலையங்களை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக  டிஐஜி விஜயகுமார், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை உட்கோட்ட‌ துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...