கோவையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி ரூ.7.38லட்சம் கொள்ளை - இருவர் கைது!

கோவை பூலுவபட்டி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38லட்சம் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை கைது செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பூலுவப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பூலுவபட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வரவு - செலவு கணக்குகளை பார்த்த பின் வீடு திரும்பி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் விற்பனையான 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், டாஸ்மாக் பதிவேடு, ஆகியவற்றை கடையில் வைக்காமல் கைப்பை ஒன்றில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று உள்ளார்.

அவருடன் மாதம்பட்டி டாஸ்மாக் கடையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது சிறுவாணி - வடிவேலம்பாளையம் சாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி பணம் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணி ராஜ், மிலன் ஆகிய இருவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 வாள்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாமல், மூளையாக செயல்பட்டு உதவி செய்தவர்கள் என்றும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...