சமூக வலைத்தளத்தில் திமுக குறித்து அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது!

2021ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய கைது சம்பவத்தை தற்போது நடைபெற்றதாகவும், திமுகவினர் கைது செய்யப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் என்பவரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: சமூக வலைதளத்தில் தி.மு.க. குறித்து தவறான தகவல் பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அடுத்த கரைப்புதூர் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்த திமுக இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செம்பாக்கவுண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அவினாசி மதுவிலக்கு போலீசார் 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து தினசரி நாளிதழ்களில் கடந்த 28-5-2021 அன்று செய்தி வெளியானது. இந்தநிலையில் சரவணபிரசாத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அவினாசியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகவினர் 5 பேர் கைது என்ற தலைப்பிட்ட செய்தியை பதிவு செய்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தியை தவறாக சித்தரித்து திமுக கட்சிக்கும், கட்சியினருக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் விதமாக திமுகவினர் கைது செய்யப்பட்டதை போல் தகவல் பரப்பிய சரவணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று சரவணபிரசாத்தை (52) கோவையில் கைது செய்தனர்.

இவர் காஞ்சிபுரம் அடுத்த பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த இவர், பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. சரவண பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் நேற்றிரவு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

மேலும், பொய் வழக்கு போட்டு சரவணபிரசாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...