வால்பாறையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறையில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.



மேலும், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் வாழைத்தோட்ட பகுதியில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையமும் திறக்கப்பட்டது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் பொது மக்களின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...