195 நாடுகளின் பெயர்களை உச்சரித்து 6 வயது சிறுவன் சாதனை!

கோவை உருமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த லோகித் என்ற 6 வயது சிறுவன் 195 உலக நாடுகளின் பெயர்களை எழுத்துக்களுடன் (Spelling) உச்சரித்த நிலையில், இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கியது.


கோவை: 195 உலக நாடுகளின் பெயர்களை எழுத்துக்களுடன் (spelling) வேகமாக உச்சரித்து கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை உருமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித்(6). ஒன்றாம் வகுப்பு பயிலும் லோகித், பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே படிப்பில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார்.

வழக்கமாக ஆங்கிலத்தில் தடுமாறும் குழந்தைகள் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவன் லோகித்  வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக அசாத்தியமாக ஒப்பித்து அசத்தி காட்டியுள்ளார்.



இதனை கவனித்த பெற்றோர்கள் சிறுவனுக்கு பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்றுத்தர தொடங்கியுள்ளனர். குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள், அதற்கான ஆங்கில எழுத்துகளையும் (spelling) சொல்லிக் கொடுத்துள்ளனர்.



இதனையடுத்து உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை (spelling)உச்சரித்து அசத்தி காட்டினார். சிறுவனின் இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது.

தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...