கோவையில் நடக்கும் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு!

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சாலைகளின் தரம் குறித்து சோதனை செய்தார். பின்னர், ஜூன் 26 ஆம் தேதி செம்மொழி பூங்கா ஒப்பந்தம் நிறைவுக்குப்பின் பணிகள் தொடங்கப்படும் என்றார்.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரத்தை பரிசோதனை செய்தார்.

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கோவை மாநகராட்சியின் வார்டு எண் 22-ல் உள்ள குமுதம் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தார். 



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா கூறியதாவது, கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

கோவையில் பாதாள சாக்கடைகள் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிய முடிய சாலைகள் போடப்பட்டு வருகிறது. இரண்டு வருட நிதியை வைத்து 563 சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.

86 கிலோமீட்டர் சாலைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மற்றவைகள் பல்வேறு நிலைகளில் வேலை நடைபெற்று வருகிறது. பழுதடைந்த சாலைகள் செப்டம்பர் மாதத்திற்குள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தடாகம் சாலை போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். 

அதேபோல சூலூர் பகுதிகளில் தரம் அற்றதாக போடப்பட்ட சாலைகள் குறித்த தகவல்கள் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஜூன் 26 ஆம் தேதி செம்மொழிப் பூங்கா ஒப்பந்தம் போடப்படுகிறது. அதற்குப்பின் பணிகள் தொடங்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...