கோவையில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை!

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல தலைமை தபால் நிலையத்திலும் 12 மணி நேர சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்விரு தபால் நிலையங்களும் காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் மேற்கு மண்டல தலைமை தபால் நிலையம் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்களில், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.



கோவை கூட்செட் ரோட்டில் கோவை கோட்ட தலைமை தபால் நிலையமும், ஆர்.எஸ்.புரத்தில், மேற்கு மண்டல தலைமை தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரையில் சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.

மாலை 4:00 மணி வரை மணி ஆர்டர் புக்கிங், இரவு 7:00 மணி வரை பதிவு தபால், பார்சல் விரைவு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் வசதிக்காக, நேற்று முதல், இவ்விரு தலைமை தபால்நிலையங்களிலும், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, அனைத்து வகையான சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், வி.பி.எல்., வி.பி.பி., தபால் ஆகிய சேவைகளை, இவ்விரு தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...