ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அதர்வா என்ற 3 வயது சிறுவன் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடியுள்ளார். இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து, சிறுவனுக்கு சான்றிதழும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.



திருப்பூர்: அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ள 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் அதர்வா என்ற மகன் உள்ளார்.



இவர் குழந்தை பருவத்திலேயே பல திறமைகளுடன் வளர்ந்து வருவதை உணர்ந்து கொண்ட இவர்களது பெற்றோர் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றை போதித்து வந்தனர். 



இந்நிலையில் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ளார் அதர்வா. இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்துள்ளது. 



இந்த சாதனை அவர்களது பெற்றோருக்கும் மட்டுமின்றி திருப்பூருக்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...