பல்லடம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலம்!

பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் குண்டம் இறங்கும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிப்பாளையம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோவிலின் குண்டம் இறங்கும் விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து, கிராம சாந்தி நிகழ்வு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகளோடு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதனையொட்டி, 25 அடி தூரத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டு 2 நாட்களாக மரக்கட்டைகளை எரியவிட்டு தயார்படுத்தப்பட்ட குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபின் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருளாடியபடி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.



குண்டம் இறங்கிய பக்தர்கள் கருவறையில் உள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர். 



34 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 



குண்டம் இறங்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். 



வே.கள்ளிப்பாளையம் கள்ளக்கிணறு வாவிபாளையம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...