கோவை திருச்சி சாலையில் துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

கோவை திருச்சி சாலையில் அடுத்தடுத்து இருந்த துணிக்கடை, கார் உதிரி பாகங்கள் விற்பனையகம் மற்றும் டயர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.



கோவை திருச்சி சாலையில் சங்கர் என்பவருக்கு சொந்தமான துணிகள் மற்றும் கைத்தறி பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 10 மணியளவில் கடை திறக்கப்படுவதற்கு முன்பாக கடையில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

5 வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அக்கடையின் அருகில் இருந்த இண்டோ கார்ஸ் என்ற கார் உதிரிபாகங்கள் விற்பனையகம் மற்றும் சுந்தரம் டயர்ஸ் என்ற டயர்கள் விற்பனை கடையிலும் தீ வேகமாக பரவியது கண்டறியப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் அக்கட்டிட உரிமையாளர் புகழேந்தி, கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபாவளி விற்பனைபோக மீதமான பட்டாசுகளை அங்கு சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த சில பட்டாசுகள் வெடித்து சாலையில் வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீவிபத்தில் துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், கார் உதிரிபாக விற்பனையகத்தில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீயே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் அதிர்ஸ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாத போதும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...