சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி, மத்திய அரசின் கொள்கைகள் சாமானிய மக்களை பாதிப்பதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால்,சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.



திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபால்சாமி தலைமையில், நல்லூர் பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தில், ஒன்றிய அரசின் விலை உயர்வு கொள்கைகள் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்,

பாஜக அரசு நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகபொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லூரில் தொடங்கிய இந்த தெருமுனைப் பிரச்சாரம் காங்கேயம் சாலை, பழைய பேருந்து நிலையம், ராயபுரம், ரயில் நிலையம் மற்றும் மன்னரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...