சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி, மத்திய அரசின் கொள்கைகள் சாமானிய மக்களை பாதிப்பதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால்,சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.



திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபால்சாமி தலைமையில், நல்லூர் பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தில், ஒன்றிய அரசின் விலை உயர்வு கொள்கைகள் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்,

பாஜக அரசு நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகபொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லூரில் தொடங்கிய இந்த தெருமுனைப் பிரச்சாரம் காங்கேயம் சாலை, பழைய பேருந்து நிலையம், ராயபுரம், ரயில் நிலையம் மற்றும் மன்னரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...