வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி பசு மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில் செல்வி என்பவர் கால்நடை விலங்குகளான பசுமாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்.



இந்நிலையில், இவரது குடியிருப்பு பகுதியின் அருகாமையில் உள்ள புல்வெளிப் பகுதியில் இவர் வளர்த்துவந்த சுமார் 2 வயது மதிக்கத்தக்க பசுமாடு மேய்ந்துகொண்டிருந்த பொழுது அங்கு வந்த இரு சிறுத்தை புலிகள் பசுமாட்டின் கழுத்துப்பகுதியில் கடித்துக்குதறியது. இதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனைக்கண்ட செல்வியின் மகன் கூச்சல் எழுப்பியதில் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி அறுகாமையில் இருந்த புதர் பகுதிக்குள் ஓடியது.

இச்சம்பவம் குறித்து வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பசுமாட்டினை உடற்கூறு பரிசோதனை செய்து செல்வியின் வீட்டின் முன்புறப் பகுதியிலேயே புதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதியில் காட்டுச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதினால் அப்பகுதியில் காட்டுவிலங்குகள் வருவது தெரிவதில்லை. ஆகவே புதர்ச் செடிகளை அகற்றுமாறு எஸ்டேட் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

இதேப் போல் வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி எறுமைக் கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயம் ஏற்பட்டு அறுகாமையில் உள்ள கால்வாயில் விழுந்தது. நான்கு நாட்கள் கழித்து துர்ணாற்றம் வீசியதால் அறுகாமையில் உள்ள கடைக்காரர்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வந்து சுமார் 2 வயது மதிக்கத்தக்க எறுமை கன்றுக்குட்டியின் சடலத்தை அகற்றினர்.



வால்பாறை குடியிருப்பு பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை புலிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...