கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்!

கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனரான ஷர்மிளா சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவின் துணிச்சலை கண்டு வியக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு கோவையில் மிகவும் பிரபலமானவர் ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது வாகனத்தில் பயணிக்கும் பயணிகள், இவருக்கு ரசிகர்களாக மாறி செல்பி புகைப்படம் எடுத்து செல்வதுமாக இருந்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் இவரது பேருந்தில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயணித்து விட்டு, பெண் ஒருவர் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது பெருமையாக இருப்பதாக கூறி ஷர்மிளாவை பாராட்டிவிட்டு சென்றார். 

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளரும். எம்.பியுமான கனிமொழியும் சமீபத்தில் அவரது பேருந்தில் பயணித்து விட்டு, அவரை பாராட்டி, கடிகாரம் ஒன்றையும் பரிசளித்து விட்டு சென்றார்.

இந்நிலையில், அவர் பணியாற்றி வந்த தனியார் பேருந்து நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 



இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, அவரது கமல் பண்பாட்டு மையம் சார்பில், புதிய கார் ஒன்றையும் பரிசாக அளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...