அரசின் சீரிய செயல்பாட்டின் காரணமாக நடப்பாண்டிற்கு ரூ.478.26 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

கோவை வணிகவரி அலுவலக கூட்டரங்கில் இன்று (6.03.2017) மண்டல அளவிலான வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் அமைச்சர் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி மாநில அரசுக்கு வணிக வரிகள் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரம் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான ஆதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ஜனவரி 2017 மாதம் வரை ரூ.3667.34 கோடிகள் மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வரி 2015- 16ல் இதே காலத்தில் வசூலான ரூ.3189.08 கோடிகளுடன் ஒப்பிடும்போது ரூ.478.26 கோடிகள் கூடுதல் வருவாய் ஆகும். அதாவது 15 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது.

2016-17 ஆம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள கருத்துருக்களை செயல்படுத்துதல் மற்றும் பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிகவரித்துறை அலுவலர்கள் கூடுதல் முயற்சி எடுத்து வரிவருவாயைப் பெருக்கி அதிக வளர்ச்சி விகிதத்தினை எட்டவேண்டும்.

மொத்த வணிகர்கள் எண்ணிக்கையில் 87 சதவிகிதம் வணிகர்கள் நமூனாக்களை இணையம் மூலமாக தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் மொத்த வரி வருவாயில் 95 சதவிகிதத்திற்கு மேல் இணையம் மூலமாக பெறப்பட்டுள்ணளது.

வணிகவரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும் போலிவணிகம் செய்பவர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும், தவறான உள்ளீட்டு வரிவரவு பெற்று பயனடைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வரிவருவாயினை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், எதிர்மறை வளர்ச்சி மற்றும் குறைவான வளர்ச்சி அறியப்படும் வணிக இனங்களில் கூர்ந்தாய்வு செய்து காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். துரித நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையிலுள்ள வரி வருவாயை வசூலிக்க வேண்டும். மேலும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசு வருவாயை பெருக்க வேண்டும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கான சிறப்புத் திட்டங்களுக்கு நமது துறையின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் முக்கியப்பங்காற்றுவதால் நமது துறையின் பணிகள் மிகவும் அர்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வணிக வரித்துறை இணை ஆணையர்கள் ரஷ்மிசித்தார்த் ஜகடே, அனிஷ்சேகர், கூடுதல் ஆணையர்கள் ரத்தினசாமி, கர்வர்ஆலம் மற்றும் வணிகவரித்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...