இந்திய வுமன் நெட்வொர்க்குடன் இணைந்து சிஐஐ அமைப்பு 'தொழில் முனைவோர்களுடம் காபி' என்னும் நிகழ்ச்சியை நடத்தியது

சிஐஐ அமைப்பு இந்திய வுமன் நெட்வொர்க்குடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை 'தொழில் முனைவோர்களுடம் காபி' என்ற நிகழ்ச்சியாக கொண்டாடியது. 

கோவையைச் சேர்ந்த 8 பெண் தொழில்முனைவோர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களுடைய அனுபவங்களையும், பயணத்தையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 



45 டிகிரி ஃபிட்னஸ் நிறுவனத்தின் நிறுவனரும், ஆரோக்கிய பயிற்சியாளருமான நித்யாநந்தினி மனோகரன் மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞரும், பேக்கரோ உணவு விடுதியின் இயக்குநருமான பிரவீனா ஜே, ஸ்டெஃப் சிகை மற்றும் முக அழங்கார நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டேஃபி மற்றும் ஸ்னேக்ஸ்பஜார்.காம் நிறுவனத்தின் இயக்குநரான நிவேதிதா ஜெயராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் முதல் அமர்வில் "Breaking the glass ceiling for all right reason" என்னும் தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடுவராக சுவை புட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சுஜாதா கிருஷ்ணன் செயல்பட்டார்.

இதில் பங்குபெற்ற தொழில்முனைவோர்கள் அனைவரும் பெண்கள் தங்களுடைய இலக்குகளை அடைவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை எனக் கூறினார். ஆனால், பாலின வேறுபாடு காரணமாக பல இடையூறுகளை பெண்கள் தங்களுயை பாதையில் சந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறு வரும் இடையூறுகளை தைரியமாக சந்தித்து பெண்கள் தங்களது வாழ்வில் சாதனையடைய வேண்டும் என்று கூறினர்.

ஸ்டெஃப் சிகை மற்றும் முக அழங்கார நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டேஃபி பேசுகையில், என்னுடைய பெற்றோரை சம்மதிக்க வைப்பதே எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் அழங்காரப் பயிற்சிக்கு சென்று அதிலேயே எனது பணியை மேற்கொள்வது குறித்து எனது தந்தை மிகவும் அச்சப்பட்டார் என கூறினார்.



பெண் தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தொழில் மற்றும் குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

முதல் அமர்வின் நிறைவாக ஈவன்ட் மோசன் அமைப்பின் சுஜாதா கிருஷ்ணன், பெண்கள் தங்களது கணவுகளை தொடர பெற்றோரின் மனநிலையிலும், சமூக கண்னோட்டத்திலும் மாறுதல் ஏற்பட வேண்டும். 

இரண்டாம் அமர்வில் "Hardwork is more powerful than Havard" என்னும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்திற்கு ஜிஅர்ஜி மேலாண்மை கல்லூரியின் துணை பேராசிரியர் வந்தனா மாதவ்குமார் நடுவராக செயல்பட்டார்.

ஏரோ ஜும்பா பிட்னஸ் மற்றும் சிவானி டிசைனர்ஸ் நிறுவனர் சியாமா ரிதுவர்மன், மிஸ்டிக்யூ நிறுவனர் ஐஸ்வர்யா சுப்பிரமணியம், போட்ரைட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிகா சம்பத்குமார் மற்றும் சாஸ்தா ஆன்லைக் பொட்டிக் இயக்குநர் சுகன்யா சுப்பிரமணியம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் தொழில் துவங்குவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தங்களது சந்தேகங்களுக்கு விடை தெரிந்துகொண்டனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...