கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து மின்சார பற்றாக்குறை தீர்ப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையினை தீர்ப்பது குறித்து கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து பில்டிங் எபிசியன்சி எக்சலரேட்டர் என்னும் பயிலரங்கை நடத்தியது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் டி.ஆல்துரை இக்கருத்தரங்கில் பேசும்போது, பசுமை கட்டிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சிஐஐ மற்றும் ஐஜிபிசி-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு மெகா வாட் அளவிற்கு மின்சாரப் பயன்பாட்டினை குறைத்ததற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஆல்துரை தனது உரையில் மேலும் பேசுகையில், இந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 37 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சார அளவை அதிகரிக்கக்கத்திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

சிஐஐ கோவை கிளையின் துணைத் தலைவர் எம்.ரமேஷ் பேசுகையில், கோவையில் தற்பொழுது 35 ஐஜிபிசி சான்று பெற்ற உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் ஐடி பார்க், தொழிற்சாலைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோறின் ஒத்துழைப்பால் இந்த கருத்தரங்கம் ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறும். இது கோவையை செழுமைமிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும் என்றார்.

ஐஜிபிசி கோவை மாவட்டத் தலைவர் ராஜேஸ் பி லுன்டு பேசுகையில், இன்று நடைபெற்ற இப்பயிலறங்கில் கோவை மாநகராட்சி சார்பாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாகவும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது கோவையைச் சேர்ந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அளித்த ஒத்துழைப்புகள் குறித்தும், கோவையை செழுமைமிக்கதாக மாற்றும் முயற்சியில் அவருடைய அர்ப்பணிப்பும் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...