பா.ஜ.க ஆட்சி காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தகவல்


பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதோ நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் "டாக்டர் ஜி. ஹெல்த் கிளீனிக்" என்னும் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும், பா.ஜ.க முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான பிங்கி ஆன்ந்தன் கலந்து கொண்டு சிறந்த பெண்களுக்கான விருதுகளை வழங்கினார்.



தொடர்ந்து மகளிர் மேம்பாடு என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் பிங்கி ஆனந்த் சிறப்புரையாற்றினார். இதையடுத்து அம்மருத்துவமனையின் பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவரான கங்காதேவி மகளிர் ஆற்றல் மற்றும் திறன்கள் குறித்து உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிங்கி ஆனந்த், மத்தியில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி செய்து வந்தாலும், ராஜிய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தான் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா  நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.



பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த மசோதா நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதனை தடுப்பதற்கான போதிய சட்டங்கள் இருப்பதாகவும், தற்போதைக்கு சமூக சீர்திருத்தமே தேவை எனவும் கூறினார்.

இதேபோல் பிரகாஷ் சிங் வழக்கு மூலம் கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அந்தந்த மாநிலங்கள்  அமல்படுத்துவது அவசியம் எனவும் பிங்கி ஆனந்த் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...