பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டமாகிய பறையாட்டக் கலை

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாது பறை கலையாட்டம். அழிவின் விழிம்பில் உள்ள இக்கலையாட்டத்தை மீட்டெடுக்க வேண்டி பல்வேறு தமிழ் அமைப்பினர், நாடகக் கலைஞர்கள் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். மேலும், அதனை தமிழ் கல்லூரிகளில் பாடத்திட்டமாக்க வேண்டும் என்னும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தகைய கோரிக்கைகளின் வெற்றியாக தற்போது பறையாட்டக் கலை பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரூர் தமிழ்க்கல்லூரியில் வளர்சீர் கயிலை சமுதாயக் கல்லூரியின் வழியே பறையாட்டக்கலை பட்டய படிப்பிற்கான வடிவம் தற்போது பெறப்பட்டுள்ளது.

தமிழுக்க என தனியொரு கல்லூரியில் பறைக்கென ஒரு பாடத்திட்டம் உருவாகியிருப்பது  அனைத்து பறை கலைஞர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பறை பயிற்சி பட்டறைக்கும், பறை இசைப்பள்ளிக்குமான இடமளித்து ஊக்கமளித்து தமிழும், கலையும் நிறைந்திருக்கும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு மற்றும் ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இப்பறையாட்டக் கலை பட்டய சான்றிதழ் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படும். இதில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் நகல் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் பாரதியார் பல்கலைக் கழகத்தினை அனுக வேண்டும். இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9659277222, 9944952893 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...