நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் நகர்ப்புரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்ட அரங்கத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் மற்றும் 12524 ஊராட்சிப் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், அவற்றின் அளவு மற்றும் நீர் இருப்பு குறித்தும் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக விரைவாக ஆய்வினை அமைச்சர் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, பருவ மழை பொய்த்ததன் காரணமாக கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொது மக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் பொது மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதுடன் குடிநீர் விழிப்புணர்வு குறித்த விளம்பர கையேடுகளையும் வெளியிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் க.பணீந்திரரெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் அருண்ராய் உள்ளிட்டு பேரூராட்சிகள், ஊராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...