பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது


ஊட்டி பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது. இதில் 'இயல், இசை, நாடக கலையை மாணவ, மாணவியர் பாதுகாத்து, வளர்க்க வேண்டும்' என, கல்லூரி கலை விழாவில் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி அரங்கில், 'சம்பரமா' என்ற பெயரில் கலை விழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சின்னசாமி பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவியர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கலையை பாதுகாக்க, வளர்க்க வேண்டும் என்றார்.



சிறப்பு அழைப்பாளராக, மைசூரு ஜெ.எஸ்.எஸ்., பல்கலை கழக பதிவாளர் டாக்டர் மஞ்சுநாதா பேசினார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணிபுரியும் நாளமில்லா சுரபி சார்ந்த மருத்துவ நிபுணர் சுரேஷ் தாமோதரன், கோவை ஜெம் மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதப்பிரியா, சென்னை 'அபெக்ஸ்' லேபாரட்டரி நிறுவன செயல் இயக்குனர் விஷாகன் ஆகியோர் பேசினர்.

இதனைத்தொடர்ந்து, மாணவியர் அபர்ணா, தாமினி, ஜனனி தலைமையிலான மாணவியர் குழுவினர் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். துணை முதல்வர் அப்சப் அசாம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஜெ.எஸ்.எஸ்., பல்கலையின் கீழ் செயல்படும், ஐந்து கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதில், வினாடி- வினா, நடனம், நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நாளை மதியம் (மார்ச் 11) நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...