ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை  அகற்ற கோரியும், மலைவாழ் மக்களுக்காக போராட்டியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்தும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி மற்றும் சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



சட்டத்திற்கு புறம்பாக ஈஷா கட்டிடங்களை கட்டியதை உயர் நீதிமன்றமே உறுதி செய்து விட்ட நிலையில் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக ஈஷா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈஷா ஆக்கிரமித்த மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்க எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினர். தற்போது அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.இந்த செயலை கண்டித்து இன்று மாவட்டங்கள் முழுவதும் எங்கள் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இன்று கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா வளாகத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் குளித்ததால் மரணமடைந்துள்ளார். இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...