துடியலூர் கருப்பராயர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கருப்பராயர் திருக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் சுவாமியை தரிசனம் செய்தனர்.



கோவை: துடியலூரை அடுத்த வடமதுரை கருப்பராயர் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கருப்பராயர் திருக்கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கருப்பராயன் சுவாமி வி எஸ் கே நகர் மற்றும் சார்பு நகரங்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழா ஓவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கருப்பராயன் சுவாமிக்கு பால், தயிர், நெய், திருநீர், சந்தம், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் அருளைப் பெற்றனர்.



தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கேசரி, சுண்டல், பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்ட மகா அன்னதானம் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பராயன் திருக்கோவில் விழா குழுவினர் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் சுந்தரம், விஸ்வநாதன், தங்கவேலு, நாகசாய், ஜனார்த்தனன், விஜயகுமார் உள்பட வி எஸ் கே நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...