கோவையில் மாதிரி வாக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் விஜயலட்சுமி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...