மாணவர்களுக்கு காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது வருத்தமளிக்கிறது -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்லூரி ஆண்டு விழா மற்றும் தமிழ்மன்றம் நிறைவு விழா" இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவிழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். 



அவர் பேசுகையில்; மாணவ- மாணவிகள் அமைதியாக இருந்தால் பல அர்த்தங்கள் உள்ளன. அமைதியான மாணவர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். கல்லூரி காலங்களில் மாணவர்கள் திறன்களை வளர்க்க வேண்டும். அதேபோன்றே இவர்களின் திறன்களை நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளையும், திறன்களையும் பல சாதனைகளை கௌரவம் செய்யும் விழாதான் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள். கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். 

அரசு வேலைகளில் மற்றும் அரசியலிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள் இன்று பல உயரிய பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு அரசியலில் காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது மிகவும் வருதமளிகிறது. தற்போதைய அரசியலில் உயர்ந்த முன்மாதிரிகள் யாரும் இல்லாததால் தவறான வழிக்கு இன்றைய இளைஞர்கள் கொண்டு செல்கின்றனர். நாம் என்ன படிக்கிறோம் என்பதை விட படிப்பினால் எவ்வளவு உயரத்தினை தொடுகிறோம் என்பதே முக்கியம். தோல்விகள், அவமானங்கள், துயரங்கள் மற்றும் கவலைகளை தோலில் சுமந்து கொண்டே இருக்காதீர்கள். இவைகளை தூக்கி எறியுங்கள் எப்பொழுதும் நிபந்தனை இல்லாத நட்பினை வளர்க்க வேண்டும் என்றார்.





இவ்விழாவில், தமிழ்மன்றத்தின் தூரிகை இதழ் சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. மேலும் இவ்வருடத்தின் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இதில், கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், துணை முதல்வர் விஜயசாமுண்டேஷ்வரி, தேர்வு கண்காணிப்பாளர் சுனிதா, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...