கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (37), இவரது கணவர் திருப்பதி என்னும் தம்பா (38), இவர் தனியார் கார் விற்பனை மையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2002 ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. அவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து திருப்பதி தினமும் வேலை முடித்தவுடன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அனிதாவை சித்திரவதை செய்யபடுவதாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது கணவர் சித்திரவதை தாங்க முடியாமல், அனிதா கடந்த 2013-ல் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் திருப்பதி தற்போது அவரது வீட்டில் அவரது நண்பர்களை அழைத்து குடிபோதையில் அவரது நண்பர்களுடன் மிக மோசமாக செயல்களில் அனிதாவை அழைப்பதாக கூறப்படுகிறது.



பின்னர், இறுதியாக அனிதா தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தன் கணவருக்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், சூலூர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தனக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அனிதா தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...