ஒரே நாளில் அதிகப்படியான அபராதம் வசூலித்து சேலம் தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் சாதனை

சமீபகாலமாக ரயில் பயணத்தின் போது பெரும்பாலான பயணிகள் பயணச்சீட்டு பெறாமலும், முறையற்ற பயணத்தில் ஈடுபட்டு வருவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனை தடுக்கும் வகையில் சேலம் தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் ரயில் பயணிகளிடைய தொடர் சோதனைகளும், ரகசிய சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி சேலம் டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தலைமையில் கடந்த வாரம் ஞாயிறன்று பயணிகளிடையே சோதனை நடைபெற்றது. அதில், முறையாக பயணச்சீட்டு இல்லாமை, பார்சல் பொருட்களுக்கான டிக்கெட் இல்லாமை உள்ளிட்டு 2,47,025 ரூபாயும், 546 நபர்கள் பயணச்சீட்டு முன்பதிவு பெறாமை என 2,43,325 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், இச்சோதனையில் அதிகப்படியான பொருட்களுக்கான அனுமதி சீட்டு பெறாததால் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் சோதனையில் அபராதமாக பெறப்பட்ட தொகையே சேலம் ரயில்வே கோட்டத்தினால் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான தொகை ஆகும். முன்னதாக 2016-யில் இதேப்போன்ற சோதனையில் சேலம் ரயில்வே கோட்டத்துறையால் 2,10,400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் சிறப்புப் படை வீரர்கள் 18 பேர் உட்பட 216 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது முறையாக பயணச்சீட்டு பெறாமை, அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதற்கான தொகை செலுத்தாமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...