நியாய விலைக்கடையை முற்றுகையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ. கைது


நியாய விலைக்கடைகளில் மலிவு விலைப்பொருட்கள் முறையாக வழங்க கோரி தி.மு.க  சிங்காநல்லூர் சட்டம்ன்ற தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக் இன்று கோவை மசக்காளி பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை முற்றுகையிட்டார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தி.மு.க  உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்களை வழங்க  கோரி கோஷமிட்டனர்.

 

தொடர்ந்து, எம்.எல்.ஏ. நா.கார்த்திக்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

எங்கள் கட்சியின் செயற்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி மக்களுக்கு முறையாக பொருட்களை வழங்காத நியாய விலைக்கடைகளை முற்றுகையிடும் போராட்ட்ம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 



தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர் மற்றும் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...