விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி ஆணையர் ஆறுதல்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் ரமேஷின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு 81-ல் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ரமேஷ் என்பவர் கடந்த 8.03.2017 அன்று பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்தினரை இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக பணியில் இருந்த போது உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர பயன்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பணியின் போது இறந்த ஒப்பந்த பணியாளருக்கு ஈடாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவதற்கு அரசு ஆணையில் வழிவகை இருப்பின் அவற்றை ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் துப்புரவுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...