கோவை முதல் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை ஜுலை முதல் துவக்கம்

கோவை முதல் கொழும்புவிற்கு நேரடியாக செல்ல ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது புதிய சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விளக்கக் கூட்டம் மார்ச் 15ம் தேதியன்று நடைபெற்றது. 

இதில், சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் உட்பட விமான சேவையின் அனைத்து மூத்த அதிகாரிகள் கூட்டத்தை விமான இயக்குநர் ஸ்ரீ ஜி.பிரகாஷ் ரெட்டி கூட்டினார். இந்திய விவகாரத்துறை மேலாளர் ஹரிதிப் சிங் பால், ஸ்ரீலங்கன் விமான சேவை சார்பில் பங்கேற்று தற்போது புதிதாக துவங்கவுள்ள கோவை முதல் கொழும்பு வரையிலான விமான சேவை குறித்து விவரித்தார்.

இந்த சேவை வரும் ஜுலை 15ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 1435/1535LT என்னும் கோவை- கொழும்புவிற்கான விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் செயல்படுத்தப்படவுள்ளது. 

மேலும், இந்த விமான சேவையை குளிர்காலத்தில் வாரம் முழுவதும் செயல்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக கோவை- கொழும்புவிற்கு நேரடி விமான சேவையாக துபாயை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர் ஆகிய விமானங்கள் சேவை அளித்து வந்தன. தற்போது புதிதாக அந்த சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...