கோவையில் கார் ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 13 கார்கள் எரிந்து நாசம்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கார்கள் எரிந்து நாசமாகின.

கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியான ஸ்ரீநகர் பகுதியில் சாய்பாபா காலனியை சேர்ந்த வர்கீஸ் என்பவர் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கண்டத் கார் ஒர்க் ஷாப் என்ற பெயரில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவர் அதன் கிளையாக கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல்பகுதியான ஸ்ரீ நகர் பமுதியிலும் கார் டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக அங்கு தொழில் செய்து வரும் இவரிடம் 6 பேர் பணியாற்றி வரும் நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ளனர்.



இதனிடையே ஒர்க் ஷாப்பில் நின்றிருந்த கார்களில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த தீ விபத்தில் அங்கிருந்த 13 கார்கள் எரிந்த சூழலில் 10 கார்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...