குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாமில் பசு, எருமை, மாடு, ஆடு, கோழி மற்றும் நாய்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி என 1124 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கர்த்தர் தேவை ஊராட்சிக்குட்பட்டடிரைவில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டாரம் காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சேகர், துணைத்தலைவர் சின்ன காளிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முகாமில் சின்ன மோளரப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் பிரகாசம் தலைமையில் மருத்துவர்கள் கொண்ட குழு பசு, எருமை, மாடு, ஆடு, கோழி மற்றும் நாய்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி என 1124 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மழை மற்றும் பனி காலங்களில் கால்நடைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....