இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்த சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரை கோட்டைமேடு பகுதியில் இருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அபுதாஹிரை கண்டுபிடித்து தருமாறு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து நீதிபதி வேலுச்சாமி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அபுதாஹிர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் அபுதாஹிரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். 

தொடர்ந்து அபுதாஹிரை வருகிற ஏப்ரல் 5ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...